×

மாட்டு இறைச்சி கடத்திய 2 பேருக்கு சரமாரி சவுக்கடி

*ஆடைகளை அகற்றி நிர்வாண ஊர்வலம்போபால் :  மாட்டு இறைச்சியை எடுத்து சென்ற 2 பேரின் ஆடைகளை அகற்றி, ஊர்வலமாக அழைத்துச் சென்று சவுக்கால் அடித்த சம்பவம் சட்டீஸ்கரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சட்டீஸ்கர் மாநிலத்தில் முதல்வர் பூபேஷ் பாகல் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்தில் மாட்டிறைச்சி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், பிலாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் நேற்று முன்தினம் 2 பேர், பைக்கில் மூட்டைகளை எடுத்துச் சென்றனர். இதை பார்த்த அப்பகுதி மக்கள், சந்தேகத்தின் பேரில் அவர்களை நிறுத்தி சோதனை செய்தனர். மூட்டைகளில் மாட்டிறைச்சி இருந்ததை பார்த்ததும், அவர்களை கடுமையாக தாக்கினர். அவர்களின் ஆடைகளை அகற்றி, ஊர்வலமாக அழைத்துச் சென்று சரமாரியாக சவுக்கால் அடித்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மாட்டிறைச்சி வைத்திருந்த நர்சிங் தாஸ் (50), ராம்நிவாஸ் மெகர் (52) ஆகியோரை போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து 33.5 கிலோ இறைச்சியை பறிமுதல் செய்தனர்….

The post மாட்டு இறைச்சி கடத்திய 2 பேருக்கு சரமாரி சவுக்கடி appeared first on Dinakaran.

Tags : Cow Meat ,
× RELATED போடியில் 100 கிலோ காட்டுமாடு இறைச்சி பறிமுதல்: 2 பேர் கைது; 4 பேருக்கு வலை